Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: டெங்கு பரவுதலை முழுவதுமாக தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அடிப்படை களப்பணியாளர்கள் 4000 பேர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீடுகளுக்கு சென்று மழைநீர் அல்லது வேறு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்து, கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு ஒரு எடுத்துக்கூறுவார்கள். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் விரிவான தகவல்களை அளித்துள்ளார்.